மரண அறிவித்தல்

திரு. வன்னியசிங்கம் தாமோதரன்

Tribute Now

யாழ். துன்னாலை தெற்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பு, உகாண்டா, சீசெல்ஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் தாமோதரன் அவர்கள் 17.12.2023  (ஞாயிற்றுக்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வன்னியசிங்கம் - சிவநாயகம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற குணரத்தினம் - இராஜேஷ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும் ஆவார்.

 

மகாலக்‌ஷமி அவர்களின் அன்புக் கணவரும், நிஷாந்தி, அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

வாகீசன், அஜீந்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

வினோதன், அனோஜன், நிரோஜன், டிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்ற அற்புதநாயகி (இலங்கை), செல்வநாயகி (இலங்கை), லோகநாயகி (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற தியாகராஜா (இந்தோனேசியா), செல்லையா (லண்டன்), காலஞ்சென்ற வெற்றிவேலு (லண்டன்), சிறீபிரகாசன் (அவுஸ்திரேலியா), பாக்கியநாயகி (இலங்கை), நாகேஸ்வரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கண்ணப்பர் (இலங்கை), கணேசலிங்கம் (இலங்கை), அருணகிரிநாதன் (ஐக்கிய அமெரிக்கா) மற்றும் லுசியானா (Lusiana - இந்தோனிசியா), அஞ்சலா (Angela-லண்டன்), ரெக்லா (Tecla - லண்டன்), ராகினி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வீமராஜன் (இலங்கை), ஜெயராஜா (அவுஸ்திரேலியா), மகேந்திரன் (பொடி-லண்டன்), குலேந்திரன் (குலேன்-அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற விஜயலட்சுமி (வசந்தி - இலங்கை), ரவீந்திரன் (ரவி-லண்டன்), கணேந்திரன் (கண்ணன் - லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்