மரண அறிவித்தல்

திரு. வைத்திலிங்கம் பிள்ளை

Tribute Now

இந்தியா திருச்சி மாவட்டம் கரியமாணிக்கம் கிராமம் கோனுடையான் கோத்திரம் M. வைத்திலிங்கம் பிள்ளை அவர்கள் 21.02.2024 (புதன்கிழமை) அன்று இரவு 8.00 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னார், தலாத்தோயா காலஞ்சென்ற முத்துசாமிப்பிள்ளை - தெய்வானை அம்மாள் தம்பதியினரின் புதல்வரும், காலஞ்சென்ற கோவிந்தசாமிப்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மருமகனும் ஆவார்.

 

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், சரவணன், ஆனந்தன், முகுந்தன், திருமதி. அபிராமி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.

 

ஷோபா,தனுஷா, திரு. அபிராமி, அர்விந்தரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கிராண்ட்பாஸ் காலஞ்சென்ற கிருஷ்ணசாமிப்பிள்ளை, ஊட்டன் எஸ்டேட் ஜெயராஜ் பிள்ளை, கண்டி பாலகிருஷ்ணன் பிள்ளை, திரு. பரராஜசிங்கம் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

 

கிருஷ்ணமூர்த்தி, சதாசிவம், உதயகுமார், விஸ்வநாதன் ஆகியோரின் மாப்பிள்ளையும் ஆவார்.

 

திருமதி. சிவபாக்கியம் தேவராஜன், காலஞ்சென்ற கமலம் பெரியண்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

நேஹா, நரேஷ், ராகுல், மாதவ், அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டாவும் ஆவார்.

 

ஆர்யானவின் அன்புத் தாத்தவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்