மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் பாலசுப்பிரமணியம்

Tribute Now

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

மேலும் தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,குணபாலன், சந்திரபாலா, சிவபாலன், கிருஷ்ணபாலன், மனேபாலா, தவச்செல்வி, கஜேந்திரன், நிரஞ்சன், நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

சிவரோகினி, றோஷி, மைதிலி, நிருத்திகா, சியாமளா தேவி, ராஜ்குமார், வாகினி, கதிர்வதனி, பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தேவநாயகம், சிவபாக்கியம், கணேசு, சிந்தாமணி மற்றும் சிவராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்றவர்களான பூரணம், பாலரெத்தினம், திருநாவுக்கரசு மற்றும் சரஸ்வதி, சௌதாமினி, பவளமணி, ஜெயமணி, காலஞ்சென்ற அரியநாயகம், நேசமலர், செல்வநாயகம், தவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருஷ்ணபிள்ளை, சண்முகலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

விமலாதேவி, விமலாதேவி(தேவி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், நிருஷா, லக்சனா, கௌரீஸ், ஐஷாக், ஏஞ்சல், அஷானா, ஹிறீக்கா, நிகாஸ், கவிஸ், சபீனா , சகீத், ராகித், சபரிஸ், அயீஸ், அனிஷா, கயல், பார்வதி, தென்றல், நிரூன், நித்தீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

 

தகவல் - குடும்பத்தினர்