மரண அறிவித்தல்

திருமதி. தவரஞ்சிதம் மகேஸ்வரன்

Tribute Now

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தவரஞ்சிதம் மகேஸ்வரன் அவர்கள் 04.07.2022 (திங்கட்கிழமை) அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
 

அன்னார், காலஞ்சென்ற சின்னையா - மங்களம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முத்துக்குமாரு - மரகதம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 
 

இவர் முத்துக்குமாரு மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும், கரிகரன், துஷியந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
 

இவர் சாந்தினி, கிஷாந் ஆகியோரின் அன்பு மாமியாரும், அயோமி, ஏவா, அபி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும், ஆரவ் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் கணேசபிள்ளை(சுவிஸ்), நவரட்ணம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தங்கம்மா (சுவிஸ்), குணபாக்கியம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்றவர்களான கந்தசாமி(கனடா), இராஜினி(இலங்கை) மற்றும் நித்தியலெட்சுமி, மகாதேவன், ஜெயராணி(கனடா), மனோகரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்