மரண அறிவித்தல்

திரு. சிவகுரு சச்சிதானந்தம் (முன்னாள் புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர்)

Tribute Now

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சச்சிதானந்தம் அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மகன் ஆவார்.

 

காலஞ்சென்ற சரவணமுத்து, வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

கனகலட்சுமி அவர்களின் பாசமிகு கணவர் ஆவார்.

 

வள்ளிப்பிள்ளை, குலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான சந்தன வடிவேல், பேரிம்பலம், தியாகராயா மற்றும் சிவராசா, மனோன்மணி, அம்பிகாவதி, சந்திராதேவி, பரராசசிங்கம், தர்மலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற குணலிங்கம், தங்கேஸ்வரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரர் ஆவார்.

 

வீரலட்சுமி, நாகரத்தினம்(ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர்), செல்வரத்தினம், இராசரத்தினம், காலஞ்சென்றவர்களான நேசரத்தினம், குணரத்தினம் மற்றும் கனகரத்தினம்(ஓய்வுநிலை அதிபர்), நவரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனர் ஆவார்.

 

சகுந்தலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, பரமேஸ்வரன்(நாயகம்-லண்டன்), சிவனேஸ்வரன்(லண்டன்), குணதேவி(கைவேலி கணேசா வித்தியாலய ஆசிரியர்), தவப்புதல்வி ஆகியோரின் பாசமிகு தந்தை ஆவார்.

 

அருணாசலம்(லண்டன்), பவானி(லண்டன்), ராகினி(லண்டன்), சிவநேசன்(சுகாதார திணைக்களம் முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்.

 

அத்துடன் காலஞ்சென்ற அருந்ததி- பாலேந்திரா, தனுசியா- ஜெயக்குமார்(லண்டன்), பிரதீபன் - ஜலனி(லண்டன்), கஜினி(லண்டன்), சோபிகன்(லண்டன்), தேனுஜன்(லண்டன்), யதினி(லண்டன்), அர்வின்(லண்டன்), கிந்துயன்,லேசிகன்(மருத்துவபீடம் யாழ்ப்பாணம்), ராஜ்கீரன், சோபிகன், நிருக்சன்(புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உயிரியல் பிரிவு மாணவன்) ஆகியோரின் பாசமிகு பேரன் ஆவார்.

 

மேலும் அருண், நவக்குமரன்(புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவன்), கிதுசன்(லண்டன்), கர்சினி(லண்டன்), பவினுயா(லண்டன்), அகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்