மரண அறிவித்தல்

திருமதி. செல்லதுரை கதிராசிப்பிள்ளை

Tribute Now

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், ஆவரங்கால் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கதிராசிப்பிள்ளை அவர்கள் 01.11.2022 (செவ்வாய்க்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை - குட்டிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற அம்பலம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற அம்பலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற சக்திவேல் (சிறி), யோகராசா (சின்னண்ணை), யோகராணி இராஜகோபால், செல்வச்சந்திரன் (ராசன்), இராசயோகம்(யோகன் பத்தன் - டென்மார்க்), தவராசா(தவம் - சுவிஸ்), தவராணி சொரூபலிங்கம் (கிளி), சாந்தகுமார்(சாந்தன் - லண்டன்), சிவனேஸ்வரவேல் (சிவா, குட்டி- சுவிஸ்), செல்வராணி மோகானந்தன்(யமுனா- கொலன்ட்), செல்வக்குமார்(செல்வா. குட்டி - கொலன்ட்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

இவர் காலஞ்சென்ற பொன்னுத்துரை தெய்வானைப்பிள்ளை மற்றும் காசித்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்