மரண அறிவித்தல்

திரு. சதாசிவம் அருணாசலம்

Tribute Now

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் அருணாசலம் அவர்கள் 04-03-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் விசாலாட்சி தம்பதிகளின் அருமைப் புதல்வர் ஆவார்.

 

காலஞ்சென்ற கந்தப்பு, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகன் ஆவார்.

 

கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

சத்தியசீலன்(சுவிஸ்), சத்தியபவானி(கனடா), சத்தியபாமா(சுவிஸ்) ஆகியோரின் அருமைத் தந்தையும், கார்த்திகா, காலஞ்சென்ற திருலிங்கம், சண்முகநாதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லம்மா, அமிர்தம், முத்தம்மா, இரத்தினம், சிவகாமிப்பிள்ளை, முத்துதம்பி மற்றும் இராசு(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், அன்னலெட்சுமி, சொர்ணம்மா, கந்தசாமி, குலமணிதேவி, கனகேஸ்வரி, தமிழ்வாணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

மேலும் அபிலஸா, அபிநயா, அக்‌ஷனா, அஸ்விதா, அஜாயன், அஸ்வினா, அபிநாஸ், அனோஜன், ஆருஜா, அக்‌ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்