மரண அறிவித்தல்

திரு. இராமுப்பிள்ளை கனகசிங்கம்

Tribute Now

முல்லைத்தீவு முதலாம் வட்டாரம் முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், அல்லாரை தெற்கு மீசாலையை வதிவிமாகவும், வவுனியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. இராமுப்பிள்ளை கனகசிங்கம் அவர்கள் 21.10.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை - செல்லம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற சின்னராசா - நல்லாமா தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

நாகரத்தினம்மாள் அவர்களின் அன்புக் கணவரும், ஜெயக்குமார்(சுவிஸ்), ஜெயசீலன்(லண்டன்), காலஞ்சென்ற ஜெயரூபன், அனுசியா (முகாமையாளர், இலங்கை வங்கி, மாங்குளம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

முருகுப்பிள்ளை, காலஞ்சென்ற தங்கப்பிள்ளை, இராசம்மா, காலஞ்சென்ற பொன்னம்பலம், பவளம், கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ரஜனி(அமுதா), ராஜகமலினி(அஜந்தா), உமையவன் (ஆசிரியர், வ/கல்நாட்டின குளம் அ.த.பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

கீர்த்தன், குமரன், அபினாஷ், அஜய், அஸ்வின், அக்ஷயன், சப்தவி, ஆருஷி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்