மரண அறிவித்தல்

திருமதி. குமாரேஸ்வரி மாரிமுத்து

Tribute Now

மாத்தளை கெந்தகொல்லையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி குமாரேஸ்வரி மாரிமுத்து அவர்கள் 11.07.2022 (திங்கட்கிழமை) காலை 5.45 மணிக்கு இறைபதம் எய்தினார். 

காலஞ்சென்ற சுப்பையா (கெந்தகொல்ல) – முனியம்மா தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா (வெல்லகல்) – காளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார். 

 

அன்னார் காலஞ்சென்ற பொன்னையா மாரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும், திருமதி புஷ்பதேவி கந்தசாமி, காலஞ்சென்ற திருமதி தவமணிதேவி அருளானந்தம், மனோகரன், ரட்ணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற சேனாதிராஜா, மகேஸ்வரி, பரமேஸ்வரி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற திரு.கந்தசாமி, திரு.அருளானந்தம், திருமதி தமயந்தி, திருமதி. சொர்ணவரலட்சுமி (பவானி) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

இவர் கௌஷலா, கஜேந்திரன், சியாமளாதேவி, பிரியதர்ஷினி, பிரதீப்குமார், சுதர்ஷினி, சஞ்ஜீவன், இந்திரகுமார், கிருஷ்ணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். 

 

இவர் காஷ்வி, ஆரணி, நாஸ், ஸக், ஸஃப், யாரா, ஹரிஸ், ஷிவாணி, ஹரிணி, ஸ்ரீதேவாஷ், ஹேஷிகா, விருஷாங்க் ஆகியோரின் அன்பு மிகு பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்