மரண அறிவித்தல்

திரு. காசிநாதர் சோமநாதர்

ஓய்வுநிலை உத்தியோகத்தர் - கட்டிடப் பொருட்கள் கூட்டுத்தாபனம்

Tribute Now

யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, வெள்ளவத்தை, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் சோமநாதர் அவர்கள் 23.03.2023 (வியாழக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் - செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு - ஈஸ்வரி தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

தவமணி அவர்களின் அன்புக் கணவரும், துஸ்யந்தி(லண்டன்), சாவித்திரி (இத்தாலி), சிவரூபன்(இத்தாலி), சிவகேசவன் (லண்டன்), சிவநேசன் (சூழலியல் நிபுணர்- யாழ்ப்பாணம்), கோபிகா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

காலஞ்சென்றவர்களான கௌரியம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர் - வட்டக்கச்சி), பவானியம்மா(ஓய்வுபெற்ற உப அதிபர்) மற்றும் வீரசிங்கம் (ஓய்வுநிலை அரச கணக்குகள் பணிப்பாளர்- திறைசேரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குமாரசாமி(இளைப் பாறிய காணி வெளிக்கள உத்தியோகத்தர். ஓவசியர்), குழந்தைவேலு(இளைப்பாறிய அதிபர்) மற்றும் தில்லைநாயகி(அவுஸ்திரேலியா), விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற நடராஜா, தவமலர்(பிரான்ஸ்), சிறிரங்கநாதன்(சுவீடன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

செந்தில்நாதன்(லண்டன்), வாசுதேவன்(இத்தாலி), சுவர்ணலோஜினி (இத்தாலி), யசோதா(லண்டன்), நிலானி(யாழ்ப்பாணம்), ஜணாங்கணன் (மக்கள் வங்கி -வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சானுஜன்(இத்தாலி), டர்மிகா(லண்டன்), சபிநயன்(லண்டன்), சாஜித்தியன் (இத்தாலி), சாம்பவி(லண்டன்), சஞ்செயன்(லண்டன்), தருணிகா (வவுனியா), ரித்திகா(இத்தாலி), கிருத்திகா(லண்டன்), லோதிகா (வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்