மரண அறிவித்தல்

திருமதி. ஜெயலட்சுமி அம்மாள் சிதம்பரம் பிள்ளை

Tribute Now

திருச்சி மாவட்டம், சாந்தனுர் கிராமத்தை பிறப்பிடமாகவும் கண்டி தலாத்து ஓயாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. ஜெயலட்சுமி அம்மாள் 2023.06.19 திங்கட்கிழமை அன்று அதிகாலை 05:04 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற க. பனையாட்சா பிள்ளை குஞ்சம்மாள் தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற மரியா பிள்ளை செல்லாயம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற திரு . சிதம்பரம் பிள்ளையின் அன்பு மனைவியும் ஆவார்.

 

திருமதி ச.மாணிக்கம்( கலஹா ), காலஞ்சென்றவர்களான P.நடராஜன் (கம்பளை) , P. கருப்பையா ( திருச்சி ), சரஸ்வதி ( கம்பளை )ஆகியோரின் அன்பு சகோதரி ஆவார்.

 

மகேந்திரன் (Relexs Hardware,Thalathuoyo ) , விஜயகுமார்( Relexs Steel, Colombo) , சிவக்கலா ( பூண்டுலோயா) , வசந்தா ( ஹப்புதலை) ஆகியோரின் தாயாரும் பூண்டுலோயா ராஜேந்திரன் ஹப்புதலை பரமேஸ்வரன் பிள்ளை ( Deepams ) , கீதா, புஷ்பகலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

திலுக்சன், துஷாகர், லோஷன் ஆகியோரின் அன்பு அம்மாயியும் அவர். ஜெகதீஸ்வரன், நிஹாரிகா, லார்விகன் , நவிஷனா, வைஷாலி ஆகியோரின் அன்பு அப்பாயியும் ஆவார்.

 

தகவல் குடும்பத்தினர்