மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் பாலசுந்தரம்

Tribute Now

யாழ் மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும்,  பெரியரசடியை வதிவிடமாகவும், பிரித்தானியா, லண்டன், Sutton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பாலசுந்தரம் அவர்கள் 02.09.2023 (சனிக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை ஆறுமுகம், இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தம்பிப்பிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும், கௌரி அம்பாள், அரவிந்தன், கோசலை, கௌதமி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

சிறீதாசன், நகுலராஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

மார்க்கோ அருண் (Marco Arun), சிறீஹரி, அபிராமி, அருண், தாரணி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

 

ஆனந்தாதேவி, சிவநாதன், காலஞ்சென்ற கதிர்காமநாதன், குமாரசூரியர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

காலஞ்சென்ற சிதம்பரநாதன், கணேசன், ரஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

துசியந்தன், பிரியந்தன், அபிராமி, அபர்ணா , இராகுலன், அனுசியா , விதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

அச்சுதன், அநந்தன், கமல் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்