நினைவேந்தல்

செல்வன். அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன்

Tribute Now

"உலகின் அனைத்திலும் இரக்கம் காட்டு
சந்தோசமாயிரு
துன்பங்களை மறந்தாலே சந்தோசம் வரும்
பிரார்த்தனை செய். நம்பிக்கையோடிரு!"
- அல்றிக் சௌஜன்யன் -

 

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், ஜோர்தானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அல்றிக் செளஜன்யன் கிறிஸ்ரிரூபன் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவஞ்சலி.

 

உயிரே!

எமதுயிரே!

துயரில் எமை

தத்தளிக்க விட்டே- மிக

உயரே நீ

சென்றதென்ன.

வெறும் கூடாய்

அலைகிறோம்,

வெண் மனதே

நீயில்லாமல்.

 

எம் 

கண்ணீரைப் போலவே,

வார்த்தைகளும்

வற்றியதே - எம்

கண்ணே..............!

நெஞ்சம் மட்டும்-

நிறைய வழிகிறது - உன்

நினைவுகளால்............

 

வெண்ணிலவே- எம்

தண்ணிலவே!

புண்ணியம் செய்தே - நீ

புகழுடம்பில் வாழுகிறாய்!

 

வந்தும்,

நிற்காத நீ,

சென்றும்

வாழ்கின்றாய் - எம்முடனே

என்றென்றும்....!

 

வானத்தில்

நீயிருந்து,

வையத்துள்

வாழ வைப்பாய்!

 

உன் நினைவுகளோடு அப்பா, அம்மா,சகோதரர்கள்

உயிரே!

எமதுயிரே!

துயரில் எமை

தத்தளிக்க விட்டே- மிக

உயரே நீ

சென்றதென்ன.

வெறும் கூடாய்

அலைகிறோம்,

வெண் மனதே

நீயில்லாமல்.

 

எம் 

கண்ணீரைப் போலவே,

வார்த்தைகளும்

வற்றியதே - எம்

கண்ணே..............!

நெஞ்சம் மட்டும்-

நிறைய வழிகிறது - உன்

நினைவுகளால்............

 

வெண்ணிலவே- எம்

தண்ணிலவே!

புண்ணியம் செய்தே - நீ

புகழுடம்பில் வாழுகிறாய்!

 

வந்தும்,

நிற்காத நீ,

சென்றும்

வாழ்கின்றாய் - எம்முடனே

என்றென்றும்....!

 

வானத்தில்

நீயிருந்து,

வையத்துள்

வாழ வைப்பாய்!

 

உன் நினைவுகளோடு அப்பா, அம்மா,சகோதரர்கள்