நினைவேந்தல்

அமரர் மல்லிகாதேவி பாலசிங்கம்

ஓய்வுநிலை அதிபர்

Tribute Now

காலச்சக்கரம் - பத்து 

ஆண்டுகளைக் கடந்தும் 

எங்கள் பெரு விருட்சத்தின் 

நினைவுகளைச் சுமக்கின்றது...

 

விதைகளாய் அன்று 

நாமிருந்த போதெல்லாம் - பெரும் 

விழுதுபோல் படர்ந்து - எமை 

காத்துநின்ற எங்கள் தாயல்லவா...

 

அம்மா அம்மா என்று 

வாஞ்சையுடன் தேடுகின்றோம் 

எங்கள் அருகே ஒருபொழுது 

வந்துதான் போவீர்களோ...

 

உங்களின் பிள்ளைகளாய் 

நாமிருக்க கண்டு களித்தீர்கள், 

எங்கள் பிள்ளைகள் - இன்றுங்களைத் 

தேடுகின்றனவே தெரிகின்றதா...   

 

இன்று ஒரு பொழுது - அல்லது 

நாளைதான் ஒரு பொழுது 

நமக்காக வந்துதான் செல்வீர்களோ - எம் 

மனசின் தவிப்பைத்தான் உணர்வீர்களோ... 

 

அம்மா உங்கள் மனம்போல் 

என்றும் நாம் வாழ்வோம் 

கலங்கா மனதுடன் அமைதிகொள்க

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்...

 

மிதுனா, அபா, பபோ